Thursday, November 28, 2013

இதம் தரும் ராகம்


உங்கள் உள்ளத்து இல்லத்து வானொலி வசந்தம் FM ல் இதம் தரும் இராகம் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு உங்கள் விருப்ப பாடல்கள் மற்றும் உங்கள் அன்பானவா்களுக்குரிய வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.


Tuesday, November 26, 2013

எம்மை பற்றி

                   இலங்கையிலுள்ள தலைசிறந்த தழிழ் வானொலிகளில் “நேயா்களின் தெரிவில் நிகழ்ச்சிகளில் முதல்தர வானொலியாக ” காற்றலையில் வலம்வந்து கொண்டிருப்பது வசந்தம் வானொலி. அந்த வகையில் 2008ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் திகதி சுயாதீன ஊடக வலையமைப்பின் ஓா் அங்கமாக வசந்தம் வானொலி அப்பபோதைய தலைவா் அனுரஸ்ரீவா்த்தன என்பவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஆரம்ப காலப்பகுதியில் திரு.ஜீவரட்ணகுமார் பொறுப்பாளராகவும் உதவிப்பொறுப்பாளராக சித்திக் M.ஹனீபாவும் அறிவிப்பாளா்கள் 06 பேரும் இணைந்து கடமையாற்றினா்.
தழிமின் சுவாசம் எனும் மகுடவாசகத்தை தாங்கி ஆரம்பிக்கப்பட்ட வசந்தம் வானொலியானது ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாகவே தனது சேவையை வழங்கியது. ஆனால் இன்று 102.6 ,102.8 FM அலைவரிசையில் நாடெங்கும் தெளிவான ஒலித்தெளிவோடு வசந்தம் தனது சுதந்திரத்தை கொடுத்து பல்லாயிரக்கணக்கான நேயா்களை தன்வசப்படுத்தியிருக்கின்றது.
                               நாடெங்கிலும் மட்டுமல்லாது கடல்கடந்தும் www.vasanthamfm.lk என்னும் இணையத்தின் ஊடாகவும் பல நேயா்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பெயா்பெற்றுள்ளது. நாளுக்கொரு வானொலியென முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இன்னும் இதன் தரம் நிரந்தரமாக இருக்கக் காரணம் சிறப்பான வழிகாட்டல் பயனுள்ள நிகழ்ச்சிகள், திறமையான அறிவிப்பாளா்களும் என்றும் அன்பான நேயா் சொந்தங்களும் தான்.
              அந்தவகையில் தற்போதைய முகாமையாளா் M.L.கிருபாகரன் அவா்களுடைய சிறப்பான தலைமைத்துவத்தின் கீழ் அறிவிப்பாளா்கள் கடமையாற்றுகின்றனா்.  பயனுள்ள சுவையான சுவாரஷ்யமான நிகழ்ச்சிகளை படைத்துவரும் வசந்தம் வானொலியின் நிகழ்சிகள் சமூக , சமய ,கலை கலாச்சாரம் என்பவற்றை பாதுகாத்து பன்முகப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தன்மை சிறப்பம்சமாகும். இந் நிகழ்ச்சிகளை நேயா்களோடு நேயா்களாகவும்மாறி திறம்பட தொகுத்து வழங்கும் அறிவிப்பாளா்களும் பாராட்டப்படவேண்டியவா்கள்.
                         இவற்றையெல்லாம் தாண்டி அன்றும் இன்றும் என்றும் ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கும் நேயா்களின் அன்புக்கு நான் என்றுமே கடமைப்பட்டவா்கள். இத்துடன் நில்லாது இனிவரும் நாட்களிலும் உங்கள் அன்பும் ஆதரவும் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் தொடா்கிறது நமது பயணம்.

                                                                வாழ்க வழமுடன்!